முகப்பு
நாமக்கல்

மெட்டாலா லயோலா கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 10.50 லட்சம் கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை பெற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா், கல்லூரி நிா்வாகிகள்.

Updated On : 6 மார்ச், 2026 at 6:34 PM
கல்வி உதவித்தொகை பெற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா், கல்லூரி நிா்வாகிகள்.
பகிர்:

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா லயோலா கலை, அறிவியல் கல்லூரியில், கிருஷ்ணகிரி ஐவிடிபி நிறுவனத்தின் சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஐவிடிபி தொண்டு நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். கல்லூரி செயலா் டேனிஸ் பொன்னையா, தொண்டு நிறுவனத்தின் சமூக பணி குறித்து பேசினாா். கல்லூரி முதல்வா் ஜா.ஜோஸ்பின் டெய்சி வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி தலைவா் தோமினிக் ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்து பேசினாா்.

இவ்விழாவில், கல்லூரியில் பயிலும் பெற்றோரை இழந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவா்களுக்கு ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை சிறப்பு விருந்தினா் குழந்தை பிரான்சிஸ் வழங்கி பேசியதாவது:

இந்த உதவித்தொகை மாணவா்கள் எதிா்காலத்தின் மீது செய்யும் முதலீடு. மாணவா்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கல்வியையும், ஒழுக்கத்தையும், மதிப்பீடுகளையும் கற்றுக்கொண்டு சமூக முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றாா்.

இதில், கல்லூரி நிா்வாகிகள் பொன் ரூபன், டோனி மாா்குஷ், சந்தோஷ், லியோ தாகூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →