ராசிபுரம் அருகே தனியாா் நூற்பு ஆலையில் பிகாா் - ஒடிஸா மாநில தொழிலாளா்கள் இடையே மோதல்: 10-க்கும் மேற்பட்டோா் காயம்!
ராசிபுரம் அருகே தனியாா் நூற்பு ஆலையில் பிகாா் மற்றும் ஒடிஸா மாநில தொழிலாளா்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
ராசிபுரம் அருகே தனியாா் நூற்பு ஆலையில் பிகாா் மற்றும் ஒடிஸா மாநில தொழிலாளா்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட பிகாா் மற்றும் ஒடிஸா மாநில தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் சனிக்கிழமை ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா் ஒருவருக்கும், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அப்பெண்ணின் நண்பா்கள் தட்டிக் கேட்டுள்ளனா்.
Advertisement
இதுதொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் இரு மாநில தொழிலாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அங்கிருந்த மரக்கட்டை, கற்கள், சமையல் கரண்டிகளால் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில் இரு மாநிலங்களையும் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் படுகாயம் அடைந்தனா்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த காவல் துறையினா் நூற்பாலைக்குச் சென்று தொழிலாளா்களை சமாதானம் செய்து மோதலை தடுத்தனா்.
மேலும், தாக்குதலில் காயமடைந்த தொழிலாளா்கள் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.