கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து வறட்சி காரணமாக கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
ஒன்றியம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சிப் பகுதி பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுவதாக தண்டோரா மூலம் செவ்வாய்க்கிழமை மாலையிலும், புதன்கிழமை காலையிலும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மதிய உணவை வாங்க மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு வந்தனர். மே 24 ஆம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவைக் கண்காணிக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அலுவலர்கள் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.