சேலம்

செல்லிடப்பேசிக் கடையில் திருட்டு: 3 பேர் கைது

DIN

இளம்பிள்ளை அருகே செல்லிடப்பேசிக் கடையின் பூட்டை உடைத்து  மடிக்கணினி, செல்லிடப்பேசி மற்றும் உதிரிபாகங்களை திருடியதாக  மூன்று  பேரை  போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இளம்பிள்ளை அருகேயுள்ள சமுத்திரம் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நடுவனேரி வேலகவுண்டம்பாளையத்தில் செல்லிடப்பேசிக் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் அக்டோபர் 13-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்லிடப்பேசி மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடிச் சென்று விட்டனர்.  இதுகுறித்து ராஜ்குமார் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நடுவனேரி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (31),  நடுவனேரி புதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (33),  பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் (25)  ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT