மே 25-இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் மே 25 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் மே 25 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 25 காலை 10.30 மணிக்கு ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில், மாவட்ட ஆட்சியரக (இரண்டாம் தளம்) அறை எண்.215 ல் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.