சேலம்

விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

DIN

ஆத்தூரில் பசுமை தாயகம் சார்பில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மற்றும் துண்டுப் பிரசுரம் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன் பசுமை தாயகம் சார்பில் தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளை உடனடியாக தடுக்க வலியுறுத்தி, மனிதச் சங்கிலி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சியில், மாநில துணை பசுமைத் தாயக செயலர் என்.பி.வெங்கடாசலம், மாவட்டச் செயலர் இளவரசு, மாவட்டத் தலைவர் கேசவமூர்த்தி, மாவட்ட துணை செயலர் கெளதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை பாமக மாவட்டத் தலைவர் இரா.கண்ணன், பச்சமுத்து, நகரச் செயலர் மணிகண்டன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT