சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51. 11 அடியாக உயர்ந்தது

DIN


கர்நாடக அணைகளிலிருந்து நீர்த் திறக்கப்பட்டதை அடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 10,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, சனிக்கிழமை காலை 9 ஆயிரம் கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து நொடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நொடிக்கு 1,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 50. 15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 51. 11 அடியாக உயர்ந்தது.
அணையின் நீர் இருப்பு 18. 51 டி.எம்.சியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் இம் மாத இறுதியில் பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT