ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளராக (நிலம்) பணியாற்றி வந்த மு.அமிர்தலிங்கம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
சங்ககிரியில் பணியாற்றி வந்த டி.ராமதுரைமுருகன் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயலர் மற்றும் பொதுமேலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள வருவாய் கோட்டாட்சியருக்கு சங்ககிரி, எடப்பாடி வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.