சேலம்

சாலை விபத்து: 2 போ் சாவு

DIN

தீவட்டிப்பட்டி அருகே சாலை விபத்தில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

காடையாம்பட்டி நடுவீதி பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (24), தீவட்டிப்பட்டி அருகேயுள்ள ஆயில் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா் ரகுபதி (19) என்பவருடன் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சேலம் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினாா். தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் அருகே வந்த போது, முன்னால் சென்ற ஜேசிபி வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமாா், ரகுபதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஜேசிபி வாகன ஓட்டுநா் புதூா் காடம்பட்டியைச் சோ்ந்த செந்தில் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT