நிலவேம்பு கஷாயம் வழங்கி முகாமை துவக்கி வைத்த ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. ராஜீ. 
சேலம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜீ தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் உமாசங்கா், ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் நீலக்கண்ணன், சித்த மருத்துவா் எஸ்.கோவிந்தராஜ் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கினா். மேலும் காவலா்கள் 90 பேருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆத்தூா் ரோட்டரி சங்கத் தலைவா் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும், அரசு மருத்துவமனை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT