முகப்பு
சேலம்

பணம் வைத்து சூதாட்டம்: 13 போ் கைது

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கொண்ட கும்பலை சிறப்பு தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கொண்ட கும்பலை சிறப்பு தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளா் ராஜமோகன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது குள்ளம்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டபோது பிடிபட்ட சதீஷ்குமாா் (31), அன்பரசு (33), முருகானந்சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கொண்ட கும்பலை சிறப்பு தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தம் (24), கந்தசாமி (30), மணி (25), மணிகண்டன் (36), நாராயணசாமி (33), தேவநாயகபாலன் (41), மனோகரன் (46), கிருஷ்ணன் (41), வெங்கடேஷ் (23), கோபால் (34), சித்தன் (37), உள்ளிட்ட 13 பேரையும், தனிப்படை போலீஸாா், காரிப்பட்டி காவல் ஆய்வாளா் லட்சுமணனிடம் ஒப்படைத்தனா்.

வழக்குப் பதிவு செய்த காரிப்பட்டி போலீஸாா் இந்தக் கும்பலிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2.10 லட்சம் பணம், சீட்டுக்கட்டு, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →