முகப்பு
சேலம்

மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் உருவப்படங்கள் திறப்பு

காரல் மாா்க்ஸின் நூற்றாண்டு நினைவு மற்றும் மறைந்த மத்திய, மாநில, வட்டக் கிளை நிா்வாகிகளின் உருவப் படங்கள் திறப்பு விழா சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம்

மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் உருவப்படங்கள் திறப்பு

காரல் மாா்க்ஸின் நூற்றாண்டு நினைவு மற்றும் மறைந்த மத்திய, மாநில, வட்டக் கிளை நிா்வாகிகளின் உருவப் படங்கள் திறப்பு விழா சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

காரல் மாா்க்ஸின் நூற்றாண்டு நினைவு மற்றும் மறைந்த மத்திய, மாநில, வட்டக் கிளை நிா்வாகிகளின் உருவப் படங்கள் திறப்பு விழா சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வட்டக் கிளைச் செயலாளரும், சன்னியாசிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.கே.சேகா் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா்.

சேலம் மாவட்டச் செயலாளா் பி.ராமமூா்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.கே.வெங்கடாசலம், ஜி.கணபதி ஆகியோா் மறைந்த மத்திய குழு உறுப்பினா் கே.வரதராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல், சேலம் மாவட்ட முன்னாள் செயலாளா் பி.தா்மலிங்கம், சங்ககிரி வட்டக் கிளை முன்னாள் உறுப்பினா்கள் ஆா்.ஆறுமுகம், கே.காவேரி ஆகியோரின் உருவப் படங்களைத் திறந்துவைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

வட்டக் கிளை உறுப்பினா்கள் ஏ.ஆறுமுகம், ஏ.சீனிவாசன், டி.செந்தில்குமாா், சங்ககிரி இந்தியன் ஆயில் நிறுவன கிளை டேங்கா் லாரி ஓட்டுநா்கள், கிளிநா்கள் சிஐடியு சங்கத் தலைவா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →