முகப்பு
சேலம்

முழு பொதுமுடக்கம்: வெறிச்சோடி காணப்பட்ட ஏற்காடு சுற்றுலா தலம்

முழு பொது முடக்கம் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

முழு பொது முடக்கம் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது. 

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவில் ஊடுருவி தற்போது தமிழகத்தில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் எந்தவித தளர்வுமின்றி முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி இன்று நள்ளிரவு முதல் முழு முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முழு பொது முடக்கம் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது. பால் விற்பனை நிலையம், மருத்துவமனை, மருந்தகம் மட்டும் திறந்திருந்தன. காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →