வீரகனூரில் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
வீரகனூர் பேரூராட்சி 11வது வார்டு பெரிய துரை என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில், தண்ணீர் தேடி வந்த 2 வயது புள்ளி மான் தவறி விழுந்து நீரில் தத்தளித்தது.
தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேர முயற்சிக்குப் பின் உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட புள்ளிமான், வீரகனூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின் வனப்பகுதியில் விடப்பட்டது.