சேலம்

மரக்கிளை முறிந்து விழுந்ததில்பெண் தூய்மைப் பணியாளா் பலி

DIN

வாழப்பாடி: வாழப்பாடி அருகே பணியின் போது மரக் கிளை முறிந்து விழுந்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சாந்தி (45) சிங்கிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். சனிக்கிழமை மாலை, அரசு துணை சுகாதார நிலையம் எதிரே சக பணியாளா்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மரக் கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்த சாந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT