சங்ககிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழா
சங்ககிரி காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் மகாத்மா காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் மகாத்மா காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. எஸ். ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்தத்தி முன்னிலை வகித்தார்.
முன்னாள் மாநில பொது செயலர் கே.நடராஜன், முன்னாள் நகரத்தலைவர்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிர்வாகிகள் ரவி, அங்கமுத்து, காமராஜ், ஐன்டியூசி நிர்வாகி சின்னுசாமி, லோகநாதன், கருப்பண்ணன், குமார், பிரபு, சின்னதம்பி, வழக்குரைஞர் எஸ்.மணிசங்கர், ஆறுமுகம், கிரிசங்கர், சந்திரன், கந்தசாமி, விஸ்வநாதன், கார்த்தி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் காமராஜர் நினைவு தினம் அனுஷ்சரிக்கப்பட்டது.