முகப்பு
சேலம்

ஆத்தூரில் காங்கிரஸ் சத்தியாகிரக அறவழிப் போராட்டம்

ஆத்தூரில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
ஆத்தூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த சத்தியாகிரக அறவழிப் போராட்டம்.
பகிர்:

ஆத்தூரில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறவழிப்போராட்டம் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர். எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் நடைபெற்றது. அப்போது சர்தார் வல்லபாய் படேலின் 145வது பிறந்தநாள் மற்றும் இந்திராகாந்தியின் 36வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. 

கண்டன உரையை மாவட்ட பார்வையாளர் பி.ஏ.சித்திக ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி நகரத்தலைவர் எல்.முருகேசன் முன்னாள் நகர்மன்ற தந்தையர் சக்ரவர்த்தி விவசாயப் பிரிவு கல்லைகருப்பண்ணன் வழக்குரைஞர் பெரியசாமி சேகோராமன் ஜி.கே.செந்தில் சம்பத் அப்பாவு எஸ்.கே.அணையரசு குமார் மகளிரணி மகாலட்சுமி உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.