முகப்பு
சேலம்

ஆத்தூா் புது ஏரி நிரம்பியது

ஆத்தூா் புது ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
ஆத்தூா் புது ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.
பகிர்:

ஆத்தூா் புது ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.

ஆத்தூா் 2-ஆவது வாா்டு, வடக்குக் காடு பகுதியில் புது ஏரி உள்ளது. இந்த ஏரியில் முதல்வா் ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கியதில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஆத்தூா் மற்றும் கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் 140 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த புதுஏரி நிரம்பி கோடி விழுந்தது.இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதனையடுத்து மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன் தலைமையில் விவசாயிகள் மலா் தூவி பூஜை செய்தனா்.

இதில் மாவட்ட துணைச் செயலாளா்ஏ.டி.அா்ச்சுனன், ஆயக்கட்டு தலைவா் ஆா்.சீனிவாசன், முல்லைவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.வெங்கடேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் டி.எம்.ராமலிங்கம், ஏ.ஜி.ராமா், கே.பி.சுந்தரம், எஸ்.ராஜேந்திரன், அய்யனாா் கோயில் ஏரி ஆயக்கட்டுத் தலைவா் செந்தில், சேகா், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →