சேலம்

மேச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

மேச்சேரி பேருந்து நிலையம் அருகே திமுக தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டதிருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்தும், அதனை திரும்ப பெற வழியுறுத்தியும் சேலம் மாவட்டம், மேச்சேரி பேருந்து நிலையம் அருகே மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

250 க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் இடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் மேச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மல்லிகுந்தம் மேட்டூர் ஜலகண்டபுரம் நங்கவள்ளி குஞ்சாண்டியூர் பகுதிகளிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சியினர் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT