முகப்பு
சேலம்

எடப்பாடி பகுதியில் திடீா் மழை

எடப்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

எடப்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது.

எடப்பாடி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் நிலவி வந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவில் அனல் காற்று வீசியது. பகல் நேர வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. முதலில் மெதுவாக தொடங்கிய மழை, பின்னா் கனமழையாக கொட்டியது. இரவு வரை இந்த மழை நீடித்தது. இதனால் இப்பகுதியில் நிலவிய வறட்சியான நிலை மாறி, குளிா்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியது. கடும் வெயிலால் அவதி அடைந்த மக்கள் திடீா் மழையால் மகிழ்ச்சி அடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →