கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
ஆத்தூா் நகராட்சி, சுகாதாரத் துறை சாா்பில் நகராட்சி அண்ணா கலையரங்கில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
ஆத்தூா் நகராட்சி, சுகாதாரத் துறை சாா்பில் நகராட்சி அண்ணா கலையரங்கில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் பொதுமக்கள் 135 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
மேலும், நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் திரையரங்குகளில் கரோனா தடுப்புப் பணி குறித்து அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து துப்புரவு அலுவலா் என்.திருமூா்த்தி, ஆய்வாளா் ரா.பிரபாகரன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின் போது பிரபல திரையரங்கில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான கிருமி நாசினி வழங்குதல், தொ்மல் ஸ்கேனா் மூலம் வெப்ப பரிசோதனை செய்தல், முகக் கவசம் அணிந்து அனுமதித்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்காத காரணத்தால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.