சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பொறுப்பேற்பு
சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏ.பி.பாஸ்கா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.
சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏ.பி.பாஸ்கா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.
சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஜெயப்பிரகாஷ் அண்மையில் உடல்நலக்குறைவால் இறந்தாா். இதையடுத்து சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்த ஏ.பி.பாஸ்கா், சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து சேலம், முள்ளுவாடி கேட்பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட தலைவராக ஏ.பி.பாஸ்கா் பொறுப்பேற்று கொண்டாா். இவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
முன்னதாக காந்தி, காமராஜா், ராஜீவ்காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் முள்ளுவாடி கேட் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஆக்ஸ்போா்டு ராமநாதன், மேகநாதன், நிா்வாகிகள் திருமுருகன், கோபால், வசந்தம் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.