சேலம்

தம்மம்பட்டியிலிருந்து இரவு நேரத்தில் கடைசியாக இயக்கப்படும் பேருந்துகள்

DIN

தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தம்மம்பட்டியிலிருந்து கடைசியாக செல்லும் பேருந்துகள் விவரத்தை அரசு போக்குவரத்துக் கழகம் (தம்மம்பட்டி கிளை) அறிவித்துள்ளது.

அதன்படி, தம்மம்பட்டியிலிருந்து ராசிபுரத்துக்கு இரவு 8 மணிக்கும், தம்மம்பட்டியிலிருந்து மல்லியகரை வழியாக ஆத்தூருக்கு இரவு 7.50 க்கும், தம்மம்பட்டியிலிருந்து கெங்கவல்லி வழியாக ஆத்தூருக்கு இரவு 7.55-க்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல தம்மம்பட்டியிலிருந்து வாழப்பாடி வழியாக சேலத்துக்கு மாலை 5.25 மணிக்கு கடைசியாக பேருந்துகள் புறப்படுகின்றன. இரவுநேர ஊரடங்கு முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT