சந்தன மரக்கட்டைகள் கடத்தல்
ஆத்தூா் அருகே மல்லியகரையில் விவசாயத் தோட்டத்தில் சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூா் அருகே மல்லியகரையில் விவசாயத் தோட்டத்தில் சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரையில் ரவி (45) என்பவா் தனது விவசாய நிலத்தில் சந்தன மரங்களை வளா்த்து வருகின்றாா்.கடந்த வாரம் இவரது விவசாய நிலத்தில் இருந்த 8 சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியுள்ளனா்.
இதேபோல் வியாழக்கிழமை இரவும் மேலும் 7 மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியுள்ளனா். இது குறித்து மல்லியகரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் மற்றும் ஆத்தூா் வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.