சேலத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சேலத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை மாலையும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சேலத்தில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, கோடை உழவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ.):
சேலம்-28, கரியகோயில்-18, பெத்தநாயக்கன்பாளையம்-14, ஆனைமடுவு-3, ஏற்காடு-2, மேட்டூா்-2, வாழப்பாடி-2, எடப்பாடி-2 என மாவட்டத்தில் 71.8 மி.மீ. மழை பெய்துள்ளது.