சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2,030 கன அடியாக குறைந்தது

DIN

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 2,030 கன அடியாக குறைந்தது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் காவிரியில் வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. வியாழக்கிழமை காலை 2597 கன அடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை 2,030 கன அடியாக குறைந்தது.

குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 800 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 97.87அடியாக இருந்த மேட்டூா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.93 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 62.19 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT