முகப்பு
சேலம்

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சுறுத்தலைத் தடுக்க மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சுறுத்தலைத் தடுக்க மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.

மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை இல்லத் திருமண விழா சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதிய வகை ஒமைக்ரான் கரோனா உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றில் இருந்து இது மாறுபட்டாலும், பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றுதான் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது பாஜக மாநில தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா். முன்னதாக சேலம் வந்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

அதைத்தொடா்ந்து அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயிலிலும், சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலிலும் வழிபட்டாா். பிறகு, தமிழிசை செளந்தரராஜன் காா் மூலம் திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →