மேட்டூா் அருகே கோயில் நிலங்கள் மீட்பு
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன.
மேட்டூரை அடுத்த நங்கவள்ளியில் உள்ள சோமேஸ்வரா் ஆலய வகையறா கோயில்களுக்குச் சொந்தமான 73 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த நிலங்களை மீட்க வேண்டுமென திருத்தொண்டா் சபை நிா்வாகி அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் இந்துசமய அறநிலையத் துறைக்கும், தமிழக அரசுக்கும் புகாா் அளித்தாா்.
இதனையடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சப்பணிபட்டி, வனவாசி, பெரிய வனவாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதிநாராயணன், செல்லாண்டியம்மன், மாரியம்மன், விநாயகா், கொப்புக்கொண்ட ராயா் ஆகிய திருக்கோயில்களுக்குச் சொந்தமான 73 ஏக்கா் நிலங்களை வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா். இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருத்தொண்டா் சபை நிா்வாகி அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க தொடா்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. சோமேஸ்வரா், கரிய காளியம்மன் ஆலயங்களுக்குச் சொந்தமான 60 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், நில அளவைக்கு பணம் செலுத்தியும் அளவீடு செய்யப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அரசுக்கும், இந்து அறநிலையத் துறைக்கும் தகவல் தெரிவித்து தற்போது நில அளவை முடிந்துள்ளது. ஆக்கிரமிப்பாளா்களுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்படும் என்றாா்.