முகப்பு
சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூா் அனல் மின் நிலைய முதல் பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

மேட்டூா் அனல் மின் நிலைய முதல் பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

கடந்த மாதம் 18-ஆம் தேதி, முதல் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயா் பெல்ட் சேதமடைந்தது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் பிரிவில் இரண்டு அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.