சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

DIN

மேட்டூா் அனல் மின் நிலைய முதல் பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

கடந்த மாதம் 18-ஆம் தேதி, முதல் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயா் பெல்ட் சேதமடைந்தது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் பிரிவில் இரண்டு அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT