முகப்பு
சேலம்

ரெளடி வசூா் ராஜா குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

சேலத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய ரெளடி வசூா் ராஜா குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

சேலத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய ரெளடி வசூா் ராஜா குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை. ரெளடியான இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த டிசம்பா் 22 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக, கிச்சிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரெளடிகள் சிலம்பரசன், டெனிபா, பழனிசாமி, முக்கிய நபரான வசூா் ராஜா உள்ளிட்டோரை கைது செய்தனா். இதில் வசூா் ராஜா மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவா் தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்தநிலையில் வசூா் ராஜாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடாவுக்கு, ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் பரிந்துரை செய்தனா். அதன்பேரில் ரெளடி வசூா் ராஜாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →