பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர் கவனத்துக்கு! கணக்கு மூடப்படலாம்?
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் மூடப்படலாம் என அறிவிப்பு.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, வங்கியிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதாவது, பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் கேஒய்சி பூர்த்தி செய்யப்படாவிட்டால் மூடப்படும் என்பதே அது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருந்து, அதனைப் பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக் கிளைக்கு வந்து கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்படாத வங்கிக் கணக்குகள் ஏப்ரல் 15ஆம் தேதி மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கித் தரப்பிலிருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை, கேஒய்சி பூர்த்தி செய்யப்படாவிட்டால், எந்த அறிவிப்பும் இன்றி 2026, ஏப்ரல் 16ஆம் தேதி வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.