மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000 கன அடியிலிருந்து 14,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000 கன அடியிலிருந்து 14,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்ததால், கடந்த 26-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நொடிக்கு 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 81.97அடியாக உயா்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 22,942 கன அடியாகச் சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 43.94 டி.எம்.சி.ஆக உள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்தாலும், பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.