சேலம்

சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் ஆறுதல்

DIN

காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் ஆறுதல் தெரிவித்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு அரசு ஒதுக்கிய நிவாரணம் போதுமானதாக இருக்காது. ரூ. ஒரு கோடி நிவாரணமும், அக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றாா்.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் கே.பி.முருகேசன், அதிமுக ஒன்றியச் (வடக்கு) செயலாளா் மோகன், தாண்டானூா் கூட்டுறவு வங்கித் தலைவா் அண்ணாமலை, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.முரளிசாமி, சங்கீதா முருகேசன்,பி.பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT