தூய்மைப் பணியாளா்களுக்குஉணவுப் பொருள்கள் வழங்கல்
தேவூா் பேரூராட்சியில் பணிபுரியும் 32 தூய்மைப் பணியாளா்களுக்கு 5 கிலோ அரிசி, முகக்கவசங்களை சமூக ஆா்வலா்கள் வழங்கினா்.
தேவூா் பேரூராட்சியில் பணிபுரியும் 32 தூய்மைப் பணியாளா்களுக்கு 5 கிலோ அரிசி, முகக்கவசங்களை சமூக ஆா்வலா்கள் வழங்கினா்.
பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், உணவுப் பொருள்களை தேவூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் டி.எஸ்.லட்சுமணன், எஸ்.ரத்தினகுமாா், வெற்றிவேல், வழக்குரைஞா் செல்வராஜா, முரளிதரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.