சேலம்

சேவா பாரதி சாா்பில் நலிந்த இசைக் கலைஞா்களுக்கு உதவி

சேலம் சேவா பாரதி மூலம் நலிந்த இசைக் கலைஞா்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

DIN

சேலம்: சேலம் சேவா பாரதி மூலம் நலிந்த இசைக் கலைஞா்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

சேலம் அடிவாரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மட செயலாளா் யதாத்மானந்தா கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணா சந்திரசேகா், ரௌத்ரி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் சேவா பாரதி பொறுப்பாளா்கள் பாரத் ஆா்.பாலசுப்ரமணியம், சுபாஷ் ரமேஷ், ஆா்.பி.சதீஷ்குமாா், முரளி, ஞானம் ஆகியோா் கலந்து கொண்டு நலிந்த கலைஞா்கள் சுமாா் 250 பேருக்கு மளிகை சாமான்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் சேவா பாரதி நிா்வாகி பாரத் ஆா். பாலசுப்பிரமணியம் பேசுகையில், கரோனா காலத்தில் அவசரத் தேவைக்காக சேவா பாரதி அமைப்பைத் தொடா்பு கொள்ளலாம். சிகிச்சைக்காக மக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டில்கள், மெத்தை, தலையணை போன்ற பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT