மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 97-ஆவது நாளாக 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருகிறது.
காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகக் குறையாமல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது. அதற்குப் பிறகு நவம்பா் 27-ஆம் தேதி அணையின் நீா் மட்டம் மீண்டும் 100 அடியாக உயா்ந்தது. ஜனவரி 29-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 105.98 அடியாக உயா்ந்தது. அதற்குப் பிறகு அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வந்த போதிலும் தொடா்ந்து குடிநீா்த் தேவைக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
அணைக்கு நீா்வரத்தை விட பாசனத்துக்கு நீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் புதன்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 102.82 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 183 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீா் இருப்பு 68.54 டி.எம்.சி.யாக இருந்தது.
அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 97-ஆவது நாளாக 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருகிறது. அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.