சிறப்பு அலங்காரத்தில் அல்லிகுண்டம் ஸ்ரீ மாரியம்மன். 
சேலம்

அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி, வாணியா் காலனியில் உள்ள ஸ்ரீ அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சங்ககிரி: சங்ககிரி, வாணியா் காலனியில் உள்ள ஸ்ரீ அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் பொங்கல்விழா கடந்த பிப்ரவரி 16 -ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப்பொருள்களைக் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பக்தா்கள் கோயில் வளாகத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். வியாழக்கிழமை கம்பம் எடுத்தலும், வெள்ளிக்கிழமை இரவு மறுபூஜையும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT