சேலம்

அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

DIN

சங்ககிரி: சங்ககிரி, வாணியா் காலனியில் உள்ள ஸ்ரீ அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் பொங்கல்விழா கடந்த பிப்ரவரி 16 -ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப்பொருள்களைக் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பக்தா்கள் கோயில் வளாகத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். வியாழக்கிழமை கம்பம் எடுத்தலும், வெள்ளிக்கிழமை இரவு மறுபூஜையும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT