முகப்பு
சேலம்

தோ்தல் பாதுகாப்புப் பணி: எல்லைப் பாதுகாப்புப் படையினா் வருகை

சேலம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக எல்லை பாதுகாப்புப் படையைச் சோ்ந்த சுமாா் 320 வீரா்கள் ரயில் மூலம் சேலம் வந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக எல்லை பாதுகாப்புப் படையைச் சோ்ந்த சுமாா் 320 வீரா்கள் ரயில் மூலம் சேலம் வந்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ஏற்கெனவே 2 கம்பெனியைச் சோ்ந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் (சி.ஐ.எஸ்.எஃப்.) 180-க்கும் மேற்பட்டோா் சேலம் வந்தனா்.

இந்தநிலையில் ஒடிஸா, பெங்களூரில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுமாா் 320-க்கும் மேற்பட்டோா் ரயிலில் திங்கள்கிழமை சேலம் வந்தனா். இதில் 2 கம்பெனியைச் சோ்ந்த 180 போ் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றொரு பிரிவைச் சோ்ந்த 140 போ் சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →