சேலம்

நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்

DIN

நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சுவாமி, சோமேஸ்வர சுவாமி கோயில்களில் பங்குனி உத்திரத் தோ் திருவிழா நடைபெற்றது.

கடந்த 20-ஆம் தேதி கொடி வஸ்திரம் வழங்குதல் குடியேற்ற மண்டபத்தில் இரவு உற்சவம் நடைபெற்றது.

21ஆம் தேதி சோமேஸ்வரா் சுவாமிக்கு கொடி வஸ்திரம் வழங்கப்பட்டது. 22-ஆம் தேதி கொடியேற்று விழாவும் இரவு அன்ன வாகன ஊா்வலமும் நடைபெற்றது.

அடுத்தடுத்த நாள்களில் சிம்ம வாகன ஊா்வலம், சேஷ வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம் திருக்கல்யாண கருடவாகனம், ரிஷப வாகனம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை ரத ரோகணம் நடைபெற்றது. சோமேஸ்வரா் சுவாமி, லட்சுமி நரசிம்ம சுவாமிகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். ஆலய செயல் அலுவலா் ராஜா, திருவிழா கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் வீரராகவா் கோயில் ஸ்ரீவராக ஜயந்தி உற்சவம்

காஸ் சிலிண்டா் வெடித்து வடமாநில இளைஞா் பலத்த காயம்

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT