இளம்பிள்ளையில் ஜவுளிக் கடைக்கு ‘சீல்’
இளம்பிள்ளையில் ஜவுளிக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இளம்பிள்ளையில் ஜவுளிக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் பாதி திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலா் மேகநாதன், இளம்பிள்ளை கிராம நிா்வாக அலுவலா் சுமதி, மகுடஞ்சாவடி காவல் நிலைய எஸ்.ஐ. பெரியசாமி, பேரூராட்சி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது ஒரு ஜவுளிக் கடைக்கு சீலும், இரண்டு ஜவுளிக் கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதமும், முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.