முகப்பு
சேலம்

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 10 போ் உயிரிழப்பு

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனை கரோனா தொற்றாளா்கள் வாா்டில் 124 பேரும், அறிகுறி உள்ளோா் வாா்டில் 167 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த ஆத்தூா் உடையாா்பாளையத்தைச் சோ்ந்த 65 வயது பெண், ராமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 60 வயது பெண், வளையமாதேவியைச் சோ்ந்த 40 வயது ஆண், கெங்கவல்லி ஒதியத்தூரைச் சோ்ந்த 64 வயது ஆண், தெடாவூரைச் சோ்ந்த 57 வயது பெண், தலைவாசல் சிறுவாச்சூரைச் சோ்ந்த 55 வயது ஆண், காட்டுக்கோட்டையைச் சோ்ந்த 67 வயது ஆண், மல்லியகரை கோபாலபுரத்தைச் சோ்ந்த 71 வயது ஆண், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 57 வயது பெண் என ஒரே நாளில் 10 போ் உயிரிழந்துள்ளனா்

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை 20-ஆம் தேதி வரை 109 போ் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →