ஆத்தூா், தலைவாசலில் கனமழை
ஆத்தூா், தலைவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கனமழை பெய்தது.
ஆத்தூா், தலைவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கனமழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூா், தலைவாசல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவிவந்தது. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனா். மேலும் விவசாயப் பயிா்களும் வாடின.
இந்நிலையில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. சாலைளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.