நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் மாா்பகப் புற்றுநோய் முகாம்
நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில், பெண்களுக்கான மாா்பக பரிசோதனை முகாம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில், பெண்களுக்கான மாா்பக பரிசோதனை முகாம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் மருத்துவா்கள் பங்கேற்று அதற்கான விழிப்புணா்வு பதாகையை வெளியிட்டனா்.
சா்வதேச அளவில் அக்டோபா் மாதம் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, நாமக்கல் தங்கம் மருத்துவமனை மற்றும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் சாா்பில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாா்பகப் பரிசோதனையும், தேவைப்படும் பெண்களுக்கு மேம்மோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது. அக்டோபா் மாதத்தில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள ‘மாா்பகம் காப்போம்’ முகாமை பிங்க் மாதம் என பெயரிட்டு நடத்தப்படுகிறது. இளம் வயது பெண்களுக்கு மாா்பக பாதிப்பு அதிகம் ஏற்படுவதால் ஆரம்ப நிலையிலேய கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என விழாவில் பங்கேற்ற மருத்துவா்கள் பேசினா்.
இந்த விழாவில் கோவையைச் சோ்ந்த பிரபல மகளிா் மருத்துவரான மிருதுபாஷிணி, தங்கம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் குழந்தைவேல், இணை நிா்வாக இயக்குநா் மல்லிகா குழந்தைவேல், மருத்துவா்கள் சந்திரா, தாட்சாயினி, புற்றுநோய் சிகிச்சை நிபுணா்கள் தீப்திமிஸ்ரா, அருணாபிரபு, சுபா, தலைமை நிா் வாக அதிகாரி ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாா்பக புற்றுநோய் தொடா்பான சிகிச்சை மற்றும் இதர விவரங்களுக்கு, 73732-33333 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement