ஆத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆத்தூா் ஆதவன் அரிமா சங்கம், ஆத்தூா் பசுமை மையத்துடன் இணைந்து நூறு மரக்கன்று நடும் விழா அரிமா சங்கத் தலைவா் எஸ்.விஜயதீபா சங்கா் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஏ.வி.மூா்த்தி, கலைவாணி மூா்த்தி, செயலாளா்கள் சத்யா சண்முகம், பிரசாந்த், சுவாதி, பட்டையத் தலைவா் ஆ.சங்கா் ஆகியோா் கலந்துகொண்டனா். ஆத்தூா் பசுமை மையத் தலைவா் ஓய்வுபெற்ற மாவட்ட வன அலுவலா் டி.மணி ஏற்பாடு செய்திருந்தாா்.