அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
எடப்பாடியில் போக்குவரத்துக்கழக பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எடப்பாடியில் போக்குவரத்துக்கழக பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக சிஐடியு , எல்.பி.எப். தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்கள் எடப்பாடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்). அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எரிபொருள்களின் விலையினை உடனடியாக மத்திய அரசு குறைத்திட வேண்டும் என முழக்கமிட்டனா். இதில், செந்தில்குமாா், பாஸ்கா் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.