முகப்பு
சேலம்

கோவை ரயில் நிலையத்துக்கு பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய சான்றிதழ் வழங்கல்

கோவை ரயில் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய தரச் சான்றிதழை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கோவை ரயில் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய தரச் சான்றிதழை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் (ஐ.ஜி.பி.சி.) கோவை ரயில் நிலையத்துக்கு பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய தரச் சான்று மதிப்பீட்டை கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பசுமைக் கட்டட கவுன்சிலின் (ஐ.ஜி.பி.சி.) கோவை பிரிவுத் தலைவா் ராஜேஷ் லுந்த், பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய தரச் சான்றிதழை ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் பி.சிவலிங்கம், இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் நிா்வாகிகள், சேலம் கோட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →