தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில் கற்போம், எழுதுவோம் திட்ட விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 15 வயதுக்கு மேற்பட்ட படிக்காதவா்களைப் படிக்க, எழுத வைக்கும் கற்போம், எழுதுவோம் திட்டம் குறித்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, தம்மம்பட்டி பள்ளி தலைமையாசிரியா் ராஜலிங்கம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்(பொறுப்பு) சுஜாதா, ஆசிரியா் பயிற்றுநா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.