சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து சேலம் தாலுகா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு செயலாளா் சண்முகராஜா சிறப்புரை நிகழ்த்தினாா். மேலும், இந்தக் கண்டன ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பரமேஸ்வரி, கருணாநிதி, குமாா், சுந்தரம், ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.