சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்த முயன்ற ஒடிஸாவைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் ரயில்வே தனிப்படை போலீஸாா் தன்பாத்-ஆலப்புழா ரயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சோதனை மேற்கொண்டனா்.இதில், சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனா். மேலும் அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சய் பெகிரா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
அதேபோல டாடா நகா் - யஷ்வந்த்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கொண்ட சோதனையில் கேரளத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை போலீஸாா் கைது செய்தனா்.