வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்
ஆத்தூா் அருகே தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.
ஆத்தூா் அருகே தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.
ஆத்தூரை அடுத்த தேவியாக்குறிச்சியில் விவசாயி பழனிவேல் என்பவரது தோட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தென்னையை பாதிக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.
மேலும், நுண்ணீா்ப் பாசனத்துக்கான வேளாண்மை துணை இயக்குநா் சாந்தி விவசாயிகளின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தாா். மாணவி ஸ்ரீபிரியா நன்றி கூறினாா்.